உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் பறிமுதல்
உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
மானாமதுரை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையடுத்து மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாலை 4.30 மணிக்கு மதுரை - ராமேசு வரம் 4 வழிச்சாலையில் மானாமதுரை வழிவிடு முருகன் கோவில் அருகே பறக்கும் படை தாசில்தார் மகா தேவன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்ராஜ் தலைமையிலான போலீசார் சோதனை செய்து கொண்டு இருந்தபோது ராம நாதபுரத்தில் இருந்து காரில் மதுரை சென்று கொண்டு இருந்த ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்த ரகமத்துல்லா மகன் குல்ஹக் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்து மானாமதுரை கருவூலத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story