ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,070 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,070 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 31 Jan 2022 5:39 PM GMT (Updated: 31 Jan 2022 5:39 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,070 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை அதிவேகமாக பரவி வந்தது. ஈரோடு மாவட்டத்திலும் தொற்று பரவல் அதிகமாக காணப்பட்டது. கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த தொற்று பரவல் கடந்த 2 நாட்களாக சற்று தணிந்து வருகிறது. நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 854 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,127 பேருக்கு தொற்று உறுதியானது.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 1,070 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 28 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 540 பேர் குணமடைந்து உள்ளனர்.
நேற்று மட்டும் 1,042 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 8 ஆயிரத்து 763 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர். இதுவரை 725 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Next Story