வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 15 Feb 2022 12:57 PM GMT (Updated: 15 Feb 2022 12:57 PM GMT)

தூத்துக்குடியில் பெண்களை கேலி செய்ததை தட்டிக்கேட்டு வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது

தூத்துக்குடி:
தூத்துக்குடி பொன்னகரத்தை சேர்ந்தவர் மகேஷ். இவருடைய மகன் பெர்கின் (வயது 19). இவரது வீட்டின் அருகே உள்ள பெண்களை தூத்துக்குடி முனியசாமி கோவில் தெருவை சேசர்ந்த ஜேம்ஸ் என்ற ஜேம்ஸ் சந்தோசம் (21) மற்றும் அவருடைய 3 நண்பர்கள் சேர்ந்து கேலி செய்தார்களாம். இதனை பெர்கின் தட்டிக் கேட்டு உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ஜேம்ஸ் சந்தோசம் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பெர்கினை அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து பெர்கின் அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா வழக்குப்பதிவு செய்து  ஜேம்ஸ் சந்தோசத்தை கைது செய்தார்.

Next Story