ஓய்வு பெற்ற ராணுவ வீரர் திடீர் சாவு
கோவில் விழாவில் பங்கேற்று திரும்பிய ராணுவ வீரர் திடீரென இறந்தார்.
நெல்லை:
பாளையங்கோட்டை ராஜாகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜாபலவேசம் (வயது 57). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தற்போது புள்ளியியல் துறையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜா பலவேசம் பங்குனி உத்திர திருவிழாவுக்கு குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது ராஜாபலவேசம் திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story