லாட்டரி சீட்டு விற்றவர் கைது


லாட்டரி சீட்டு விற்றவர் கைது
x
தினத்தந்தி 24 March 2022 5:08 PM GMT (Updated: 24 March 2022 5:08 PM GMT)

திருவெண்ணெய்நல்லூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேட்டுக்குப்பம் பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். 

விசாரணையில் அவர் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெண்ணைவலம் கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன் (வயது 55) என்பதும், இவர் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜெகதீசனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 60 ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Next Story