சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்க அதிகாரிகள் ஆய்வு


சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்க அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 30 March 2022 5:48 PM GMT (Updated: 30 March 2022 5:48 PM GMT)

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

பி.ஏ.பி. திட்டம் 

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் (பி.ஏ.பி.) கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 3.77 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது. விவசாயிகள் நலன் கருதி 4 மண்டலங்களாக தண்ணீர் பிரித்து வழங்கப்படுகிறது. 

தற்போது, முதலாம் மண்டல பாசனத்திற்கு 4-வது சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 15 ஆயிரத்து 600 ஏக்கர் பி.ஏ.பி. திட்டத்தில் பாசனம் பெற்று வருகிறது. 

இந்த தண்ணீரை வைத்து விவசாயிகள் தென்னை, காய்கறிகள் மற்றும் மக்காச்சோளம் சாகுபடி செய்து உள்ளனர். 

அதிகாரிகள் ஆய்வு

இந்த நிலையில், பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருட்டு நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து  கோவை மாவட்ட பி.ஏ.பி. கூட்டு கண்காணிப்புக்குழுவை சேர்ந்த கோவை தெற்கு ஆர்.டி.ஓ. இளங்கோ, சூலூர் தாசில்தார் சகுந்தலா மணி, பி.ஏ.பி. வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் தேவராசன், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, ஆதிசிவன் மற்றும் போலீசார், மின்வாரிய அதிகாரிகள் சுல்தான்பேட்டை வந்தனர்.

 பின்னர் அவர்கள் செஞ்சேரிமலை- கொடுவாய் பிரதான வாய்க்காலில் இரவில் திடீரென்று ஆய்வு செய்தனர்.

அப்போது இரவு நேரத்தில் தண்ணீர் திருடப்படுகிறதா? என்று வாய்காலின் ஓரத்தில் நடந்து சென்று பார்த்தனர். ஆனால் தண்ணீர் திருடப்படவில்லை. 

கடும் நடவடிக்கை

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, பி.ஏ..பி வாய்க்காலில் மோட்டார் வைத்து சட்டவிரோதமாக தண்ணீர் திருடினால் பாரபட்சமின்றி உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து கடும் நடவடக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story