2 கோவில்களின் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 22 April 2022 6:43 PM GMT (Updated: 22 April 2022 6:43 PM GMT)

2 கோவில்களின் உண்டியலை உடைத்து பணம் திருட்டு நடந்துள்ளது.

கிருஷ்ணராயபுரம், 
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் லாலாபேட்டை அருகே பிள்ளபாளையம் ஊராட்சி வீரக்குமாரன்பட்டி கிராமத்தில் தென்னந்தோப்பில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்து பணம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த தங்கதாலியையும் திருடி விட்டு சென்று விட்டனர்.அதேபோல கருப்பத்தூர் ஊராட்சி கே.புதுப்பட்டி கிராமத்தில் தென்னந்தோப்பில் பெரியகாண்டி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சம்பவத்தன்று இரவு உண்டியலை உடைத்து பணத்தை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.இதையடுத்து கோவில்களில் திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து லாலாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story