வாலிபருக்கு கொலை மிரட்டல்; 3 பேர் கைது


வாலிபருக்கு கொலை மிரட்டல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 29 April 2022 5:05 PM GMT (Updated: 29 April 2022 5:05 PM GMT)

விளாத்திகுளம் அருகே மது குடிக்க பணம் தர மறுத்த வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

எட்டயபுரம்:
விளாத்திகுளம் போலீஸ் லைன் தெருவைச் சேர்ந்தவர் குமாரவேல் (வயது 30). இவரும், அவரது நண்பர் மாரிச்செல்வமும் மாட்டிற்கு தீவனம் வாங்குவதற்காக வேம்பார் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த செண்பகராஜ் (41), சுடலைமணி (22) மற்றும் வைரமுத்து (22) ஆகிய 3 பேரும் குமாரவேல் மற்றும் அவரது நண்பரிடம் மது குடிப்பதற்காக ரூ.500 கேட்டு தகராறு செய்துள்ளனர். ஆனால் அவர்கள் பணம் கொடுக்க மறுத்ததால், கத்தியை காட்டி மிரட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செண்பகராஜ், சுடலைமணி மற்றும் வைரமுத்து ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story