பெரும்புகை கிராமத்தில் வேளாண் விழிப்புணர்வு முகாம்


பெரும்புகை கிராமத்தில்  வேளாண் விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 8 May 2022 5:30 PM GMT (Updated: 8 May 2022 5:30 PM GMT)

பெரும்புகை கிராமத்தில் வேளாண் விழிப்புணர்வு முகாம்


செஞ்சி

வல்லம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வல்லம் ஒன்றியம் பெரும்புகை கிராமத்தில் மண்வள மேளா என்ற விவசாய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு வல்லம் ஒன்றியக்குழு தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் விளக்க உரை நிகழ்த்தினார். விழுப்புரம் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் முருகன், வல்லம் வேளாண்மை உதவி அலுவலர் விக்னேஷ் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மண் மாதிரி சேகரித்தல், ஆய்வு செய்தல், மண் வள அட்டையில் உள்ள பரிந்துரைப்படி உரமிட்டு செலவைக் குறைத்தல் போன்றவற்றை விளக்கிக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் விவசாயிகளுக்கு மண் பரிசோதனை செய்து காட்டினர்.

Next Story