நம்பெருமாள்-சேரகுலவல்லி தாயார் சேர்த்தி சேவை


நம்பெருமாள்-சேரகுலவல்லி தாயார் சேர்த்தி சேவை
x
தினத்தந்தி 10 May 2022 7:16 PM GMT (Updated: 10 May 2022 7:16 PM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் - சேரகுலவல்லி தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது.

ஸ்ரீரங்கம், மே.11-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் - சேரகுலவல்லி தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது.
சேரகுலவல்லி
குலசேகர ஆழ்வார் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் பெருமாள் திருமொழிஎன்றபகுதியைபாடியுள்ளார். குலசேகர ஆழ்வார் மன்னராக இருந்த போதிலும் பெருமாள் மீது கொண்டிருந்த பக்தி காரணமாக தனது ஒரே மகளான சேரகுலவல்லியை ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு திருமணம் செய்து வைத்தார். அன்று முதல் சேரகுலவல்லி ரெங்கநாதரின் நாயகிகளில் ஒருவராக வணங்கப்பட்டு வருகிறார்.
இவருக்கு பெரிய சன்னதியின் 2-ம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தின் மேற்கு பகுதியில் சன்னதி உள்ளது. குலசேகர ஆழ்வார், சேரகுலவல்லியை பெருமாளுக்கு ராமநவமி நாளில் திருமணம் செய்து கொடுத்ததாக ஐதீகம். இதனால் ஆண்டு தோறும் ராமநவமி அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் - சேரகுலவல்லி தாயார் திருக்கல்யாண உற்சவம் எனப்படும் சேர்த்தி சேவை நடைபெறும்.
சேர்த்தி சேவை
இந்த ஆண்டு ராமநவமி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைந்தார். அங்கு காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார்.
பின்னர் நம்பெருமாள் சேரகுலவல்லி தாயாருடன் பகல் 1 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை சேர்த்திசேவைகண்டருளினார்.அர்ச்சுனமண்டபத்திருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு  5 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

Next Story