ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம்


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம்
x
தினத்தந்தி 10 May 2022 7:34 PM GMT (Updated: 10 May 2022 7:34 PM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம்

ஸ்ரீரங்கம், மே, 11-
தமிழ்நாடு முதல் அமைச்சர்  மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 23-ந் தேதி முதல் நாள் முழுவதும் அதிரசம், லட்டு, மைசூர்பாகு, தேன் குழல் ஆகியவற்றில் ஒன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு திங்கள் முதல் வியாழன் வரை சுமார் 4 ஆயிரம்பேருக்கும், திருவிழா காலங்கள் மற்றும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 8 ஆயிரம் பக்தர்களுக்கும் பிரசாதமாகவழங்கப்பட்டுவருகிறது. இத்திட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று திருச்சியை சேர்ந்த பக்தர் ஒருவர் சுமார் 5 ஆயிரம் லட்டுகளை நன்கொடையாக ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில்  பக்தர்களுக்கு வழங்கினார்.

Next Story