தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 11 May 2022 3:40 PM GMT (Updated: 11 May 2022 3:40 PM GMT)

காரைக்கால் கோட்டுச்சேரியில் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காரைக்கால் கோட்டுச்சேரியை அடுத்த திருவேட்டக்குடி வடக்கு வீதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது44). இவர் டைல்ஸ் பதிக்கும் தொழிலாளி. இவரது மனைவி விஜி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் விஜி குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதனை திருப்பி செலுத்த முடியாததால் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த வேல்முருகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டுச்சேரி போலீசார்  வழக்குப்பதிவு  செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story