திருக்கோவிலூர் அருகே ரூ.10 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


திருக்கோவிலூர் அருகே ரூ.10 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 15 May 2022 4:52 PM GMT (Updated: 15 May 2022 4:52 PM GMT)

திருக்கோவிலூர் அருகே ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள வீரபாண்டி கிராம பகுதியில் உள்ள கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அரகண்டநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வேட்டவலம் மெயின் ரோட்டில் உள்ள மளிகை கடையில் சோதனை செய்தபோது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட 1140 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் தண்டபாணி மகன் ரியாஸ்(வயது 34) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story