காந்தி நினைவிடத்தில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மலர்வளையம் வைத்து மரியாதை


காந்தி நினைவிடத்தில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மலர்வளையம் வைத்து மரியாதை
x
தினத்தந்தி 8 April 2017 5:05 AM GMT (Updated: 8 April 2017 5:05 AM GMT)

4 நாள் அரசுமுறைப்பயணமாக இந்தியா வந்துள்ள வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

புதுடெல்லி, 

வங்காளதேச அதிபர் ஷேக் ஹசினா நான்கு நாள் அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். ஏழாண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு வருகைதரும் வங்காளதேச நாட்டின் பிரதமர் என்பதால் அவரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.நேற்று காலை  டெல்லி வந்த ஷேக் ஹசீனாவை விமானம் நிலையம் சென்றே பிரதமர் மோடி வரவேற்றார்.

இந்நிலையில், டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் ஷேக் ஹசினாவுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் சிலர் கலந்து கொண்டனர்.
இந்த வரவேற்பை ஏற்றுகொண்ட ஷேக் ஹசினா, டெல்லி ராஜ்கட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்றார். காந்தி சமாதியின்மீது அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா-பிரதமர் மோடி இடையில் நடைபெறவுள்ள பல்வேறு சுற்று பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கும் இடையில் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக, வங்காளதேசத்துக்கு 50 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை இந்தியா வழங்கவுள்ள ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story