கேல் ரத்னா, அர்ஜூனா விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் குழுவில் சேவாக்-பி.டி.உஷா


கேல் ரத்னா, அர்ஜூனா விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் குழுவில் சேவாக்-பி.டி.உஷா
x
தினத்தந்தி 27 July 2017 2:43 PM GMT (Updated: 27 July 2017 2:43 PM GMT)

கேல் ரத்னா, அர்ஜூனா விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் குழுவில் சேவாக், பி.டி.உஷா ஆகிய பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

புதுடெல்லி,

விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்கள் ஆண்டு தோறும் மத்திய விளையாட்டு துறையால் கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதி சி.கே.தாக்கர் தலைமையில் 12 பேர் கொண்ட இந்த குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், தடகள வீராங்கனை பி.டி.உஷா,  குத்துச் சண்டை வீரர் முகுந்த் கிலேகர், கபடி வீரர் சுனில் தப்பாஸ், பாரா தடகள வீராங்கனை லதா மாத்வி உள்ளிட்டோரும் குழுவில் உள்ளனர்.  இந்த தேர்வுக் குழு ஆகஸ்ட் 3-ம் தேதி கூடி கேல் ரத்னா, அர்ஜூனா விருதுக்குரியவர்களை முடிவு செய்யும்.

Next Story