அரியானா பஞ்ச்குலா வன்முறை சம்பவத்துக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்
அரியானா பஞ்ச்குலா வன்முறை சம்பவத்துக்கு பிரதமர் மோடி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதை அடுத்து அரியானா, பஞ்சாப்பில் வன்முறை வெடித்துள்ளது. அரியானா-பஞ்சாப் மாநில கலவரத்தில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
பஞ்ச்குலா வன்முறை சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அமைதி காக்க ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்புநிலை திரும்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதை அடுத்து அரியானா, பஞ்சாப்பில் வன்முறை வெடித்துள்ளது. அரியானா-பஞ்சாப் மாநில கலவரத்தில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
பஞ்ச்குலா வன்முறை சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அமைதி காக்க ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்புநிலை திரும்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story