இறுதி அஞ்சலி செலுத்த ஸ்ரீ தேவியின் வீட்டிற்கு வெளியே திரண்ட ரசிகர்கள்


இறுதி அஞ்சலி செலுத்த ஸ்ரீ தேவியின் வீட்டிற்கு வெளியே திரண்ட  ரசிகர்கள்
x
தினத்தந்தி 25 Feb 2018 8:47 AM GMT (Updated: 25 Feb 2018 8:47 AM GMT)

நடிகை ஸ்ரீதேவி (வயது 54) துபாயில் நடந்த திருமணவிழாவில் பங்கேற்க சென்ற போது நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்தார். #SriDevi

மும்பை,

பிரபல நடிகை ஸ்ரீ தேவி தனது கணவர் போனி கபூர் மற்றும் இரு மகள்களான ஜான்வி, குஷி யுடன் மும்பையிலுள்ள லோகந்த்வாலாவின் தனது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் துபாயில் நடந்த திருமணவிழாவில் பங்கேற்க சென்ற போது நேற்றிரவு திடீரென  மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்திய விமானநிலைய ஆணையத்தின் உத்தரவின் படி துபாயிலிருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 8 மணிக்குள் அவரது உடலை மும்பைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது உடலைக் கண்டு இறுதி அஞ்சலி செலுத்த ரசிகர்கள் கூட்டம் ஸ்ரீ தேவியின் லோகந்த்வாலாவின் வீட்டின் முன் குவிந்துள்ளனர். 

மேலும் பதற்றமான சூழ்நிலையை தடுக்க இரண்டு போலீஸ் வாகனங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன்ர். இதற்கிடையில் எந்த பிரபலங்களும் அவரது இல்லத்திற்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story