காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் நிச்சயம் வெற்றிபெறுவோம் - தம்பிதுரை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்று மக்களவை துணை தலைவர் தம்பிதுரை கூறியுள்ளார். #CauveryManagementBoard #CauveryIssue #Thambidurai
புதுடெல்லி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பிக்கள் பாராளுமன்றம் வளாகம் அருகே 10-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இது குறித்து மக்களவை துணை தலைவர் தம்பிதுரை செய்தியார்களிடம் கூறியதாவது:
காவிரி விவகாரத்தில் தமிழக நலனுக்காக போராடுகிறோம், தொடர்ந்து போராடுவோம். மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக தெளிவான ஒரு விளக்கம் இல்லை, எதற்காக நம்பிக்கையில்லா தீர்மானம் என தெரியவில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் நிச்சயம் வெற்றிபெறுவோம். மேலாண்மை வாரியம் அமைக்க 2 வாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். மத்திய அரசு உறுதி தரும்வரை எங்கள் போராட்டம் தொடரும். காவிரிக்காக கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் போராடி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story