பீகாரில் ஓடும் ரெயிலில் தீப்பிடித்ததால் பரபரப்பு


பீகாரில் ஓடும் ரெயிலில் தீப்பிடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 March 2018 9:57 PM GMT (Updated: 18 March 2018 9:57 PM GMT)

டெல்லியில் இருந்து பீகார் மாநிலம் சகர்ஷா நோக்கி ‘பூரபியா’ எக்ஸ்பிரஸ் ரெயில் மஹ்னார் ரெயில் நிலையம் அருகே சென்றபோது ரெயிலின் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹாஜிபூர்,

டெல்லியில் இருந்து பீகார் மாநிலம் சகர்ஷா நோக்கி ‘பூரபியா’ எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. நேற்று முன்தினம் இரவு பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டம் மஹ்னார் ரெயில் நிலையம் அருகே சென்றபோது ரெயிலின் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் பதற்றம் அடைந்த பயணிகள் சிலர் உயிர் பிழைப்பதற்காக ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்தனர். விபத்து ஏற்பட்டவுடன் ரெயில் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக ரெயிலை நிறுத்தியதால் மற்ற பெட்டிகளுக்கும் தீ பரவாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று ரெயில் பெட்டியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

ஆனாலும் தீயில் சிக்கி பயணி ஒருவர் படுகாயம் அடைந்தார். ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது தெரியவந்தது. இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story