பரீட்சை தாளில் 500 ரூபாய் நோட்டுகள் ஆசிரியருக்கு லஞ்சமாக வைத்த மாணவர்கள்
உத்தரபிரதேசத்தில் தேர்வை எழுதிய மாணவர்களில் சிலர் விடைத்தாளின் நடுவில் ரூபாய்தாளை லஞ்சமாக வைத்துள்ளனர்.
பொரோசாபாத்
உத்திரப்பிரதேசத்தில் பல பரீட்சைகளில் நியாயமற்ற நடைமுறையில் மோசடி செய்யப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து அரசு அதிகாரிகள் கடுமயான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தேர்வு மையங்களில் சி.சி.டி.வி.க்கள் நிறுவப்பட்டுள்ளன மற்றும் அதிகாரிகள் உள்ளூர் புலனாய்வு மற்றும் சிறப்பு பணிக்குழுவின் உதவியுடன் மோசடியை கட்டுப்படுத்த முடிவு செய்தனர்.
உத்தர பிரதேசத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வுகள் நடந்து வருகிறது . முதல் நாள் 1.8 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதவில்லை. இரண்டாவது நாளான நேற்று 5 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதவில்லை.
பரீட்சையில் காப்பி அடிப்பதை தவிர்ப்பதற்காக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகளால் மாணவர்கள் பரீட்சைக்கு எழுத வரவில்லை.
ஹார்டோ மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான மாணவர்கள் பரீட்சை எழுதுவதில் இருந்து விலகி உள்ளனர். ஹார்டோவில் மட்டும் 31,000 மாணவர்கள் தேர்வு எழுதாமல் விலகி உள்ளனர்.
தேர்வை எழுதிய மாணவர்களில் சிலர் விடைத்தாளின் நடுவில் ரூபாய்தாளை லஞ்சமாக வைத்துள்ளனர்
பெரோசாபாத் பகுதியில் உள்ள பள்ளியில் தேர்வு முடிந்தவுடன் அந்த விடைத்தாளை கண்காணிப்பாளர்கள் சரிபார்க்கும் போது அதற்குள் 50,100 மற்றும் 500 ரூபாய் தாள்கள் இருந்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர்கள் கூறுகையில், மாணவர்கள் ரூபாய் நோட்டுகளை விடைத்தாளில் வைத்து லஞ்சமாக அனுப்புகின்றனர்.
ஆனால் இதையெல்லாம் பெற்றுக்கொண்டு மதிப்பெண்கள் வழங்குவதில்லை. விடைத்தாளில் அவர்கள் எழுதியிருக்கும் விடையை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் வழங்குகிறோம்.
எந்த ஆசிரியரும் விடைத்தாளில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொள்வதில்லை என்றார்.கேள்விக்கு விடைதெரியாமல், மாணவர்கள் அளிக்கும் பதில் பல விதங்களில் குறும்புத்தனமாக சில சமயங்களில் இருக்கும்.
ஆனால் தற்போது,எப்படியோ பாஸ்ஆக வேண்டும் என்பதற்காக பணத்தையே விடைத்தாளில் வைத்து அனுப்புகின்றனர்
லஞ்சம் இருக்கவே கூடாது லஞ்சத்தை முற்றிலும் ஒழிக்கவேண்டும் எனஎன்னதான் கூவினாலும்,மாணவ பருவத்தியே லஞ்சம் கொடுப்பது தொடங்கிவிட்டது.
Currency notes found in answer sheets during the checking of 12th board examination papers in Firozabad, UP. Teachers say, 'we are giving marks only on merit. None of us are accepting the money found in the answer sheets.' pic.twitter.com/mPF48RKnVN
— ANI UP (@ANINewsUP) 19 March 2018
Related Tags :
Next Story