எடியூரப்பா பதவி ஏற்பு: அம்பேத்கார் உருவாக்கிய அரசியலமைப்பை அழிக்க ஒரு சதித்திட்டம் மாயாவதி காட்டம்


எடியூரப்பா பதவி ஏற்பு: அம்பேத்கார் உருவாக்கிய அரசியலமைப்பை அழிக்க ஒரு சதித்திட்டம் மாயாவதி காட்டம்
x
தினத்தந்தி 17 May 2018 7:59 AM GMT (Updated: 17 May 2018 7:59 AM GMT)

கர்நாடகாவில் 3-வது முறையாக எடியூரப்பா பதவி ஏற்றது குறித்து கருத்து தெரிவித்த மாயாவதி ,அம்பேத்கார் உருவாக்கிய அரசியலமைப்பை அழிக்க ஒரு சதித்திட்டம் என கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

கர்நாடகாவில் 3-வது முறையாக எடியூரப்பா பதவி ஏற்றுக்கொண்டார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியிருப்பதாவது:

பாபா சாகேப் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை அழிக்க ஒரு சதித்திட்டம்.   அவர்கள் (பிஜேபி) அதிகாரத்திற்கு வந்ததால் அவர்கள் அரசாங்க இயந்திரங்களை தவறாக பயன்படுத்துவார்கள். இதன்மூலம் ஜனநாயகம் சீர்குலையும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story