உத்தர பிரதேசத்தில் தெரு நாய்கள் தாக்கியதில் மேலும் ஒரு குழந்தை காயம்
உத்தரபிரதேசத்தில் தெரு நாய்கள் தாக்கியதில் மேலும் ஒரு குழந்தை காயமடைந்துள்ளது.
லக்னோ,
உத்தரப் பிரதேசத்தில் தெருநாய்கள் கடிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவது அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து அச்சம் அடைந்துள்ளனர். கடந்த 6 மாதங்களில் கயிராபாத் கிராமத்தில் நாய்கள் தாக்கியதில் தற்போது வரை 13 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் கயிராபாத் கிராமத்தில் தெரு நாய்கள் தாக்கியதில் மற்றொரு குழந்தை படுகாயம் அடைந்துள்ளது. இதனையடுத்து மோசமான நிலையில் படுகாயமடைந்த அந்த குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் பலியானதற்கு ஓநாய்களே காரணம் என உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்த யோகி நாத் அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டதில் தற்போது கடந்த 2 மாதங்களில் நாய்களின் தாக்குதலில் இருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story