காதலன் கண்ணெதிரிலேயே காதலி பாலியல் பலாத்காரம் 2 பேர் கைது
கோவாவில் காதலன் கண்ணெதிரிலேயே காதலி பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பனாஜி
கோவாவின் செர்ணபாடிம் கோல்வா கடற்கரையில் அமர்ந்து காதலர்கள் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு இந்தூரில் இருந்து சுற்றுலா வந்த 3பேர் , இவர்களை புகைப்படம் எடுத்ததோடு மட்டுமல்லாமல் அதனை காதலர்களிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
காதலர்கள் பணம் தர மறுக்கவே, காதலன் கண்ணெதிரிலேயே காதலியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதுகுறித்து காதலன் போலீசில் புகார் அளித்ததையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளானர், ஏனைய நபர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
கண்காணிப்பாளர் (தென் கோவா) அரவிந்த் கவாஸ் கூறியதாவது:-சஞ்சீவ் தனஞ்சேய் பால், 23, மற்றும் ராம் சந்தோஷ் பரியா, 19 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 வது குற்றவாளியை தேடிவருகிறோம் என கூறினார்.
Related Tags :
Next Story