பெண் குழந்தைக்கு ஆசை; பிறந்த ஆண் குழந்தையை டிரம்மில் நீருக்குள் மூழ்க செய்து கொன்ற தாய் கைது


பெண் குழந்தைக்கு ஆசை; பிறந்த ஆண் குழந்தையை டிரம்மில் நீருக்குள் மூழ்க செய்து கொன்ற தாய் கைது
x
தினத்தந்தி 25 Jun 2018 3:14 PM GMT (Updated: 25 Jun 2018 3:14 PM GMT)

பெண் குழந்தை பிறக்கும் என ஆசைப்பட்டு பிறந்தது ஆண் குழந்தை என்பதற்காக அதனை டிரம்மில் நீருக்குள் மூழ்க செய்து கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அவுரங்காபாத்,

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரில் பைதன்கேடா கிராமத்தில் வசித்து வரும் பெண் வேதிகா எராண்டே.  இவருக்கு பிறந்து 10 மாதம் ஆன பிரேம் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது.

இந்த நிலையில் தனது குழந்தையை காணவில்லை என கூறி பித்கின் காவல் நிலையத்தில் வேதிகா புகார் அளித்துள்ளார்.  தனது குழந்தை கடத்தப்பட்டு இருக்கலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து போலீசார் மோப்ப நாயுடன் சென்று சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.  இதில், வேதிகாவின் வீட்டு வராண்டாவில் உள்ள நீர் நிறைந்த டிரம் அருகே மோப்ப நாய் நின்றுள்ளது.  அதில் குழந்தை இறந்த நிலையில் கிடந்துள்ளது.

போலீசார் சந்தேகமடைந்து வேதிகா மற்றும் அவரது உறவினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.  இதில், தனக்கு ஒரு மகன் இருக்கிறார்.  அடுத்து கர்ப்பமடைந்தபொழுது தனக்கு பெண் குழந்தை பிறக்கும் என நினைத்திருந்தேன்.  ஆனால் ஆண் குழந்தை பிறந்து விட்டது.  இதனால் அதனை கொலை செய்து விட்டேன் என வேதிகா கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து போலீசார் பிரிவு 302ன் (கொலை) கீழ் வழக்கு பதிவு செய்து வேதிகாவை கைது செய்துள்ளனர்.


Next Story