என்னுடைய கணவர் உதவியுடன் எம்.எல்.ஏ. பாலியல் பலாத்காரம் செய்தார் பெண் புகார்


என்னுடைய கணவர் உதவியுடன் எம்.எல்.ஏ. பாலியல் பலாத்காரம் செய்தார் பெண் புகார்
x

என்னுடைய கணவர் உதவியுடன் எம்.எல்.ஏ. பாலியல் பலாத்காரம் செய்தார் என பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்துள்ளார்.


கவுகாத்தி, 


அசாம் மாநிலத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நிஜாம்உத்தின் சவுத்திரி. தனது கணவர் துணையுடன் எம்.எல்.ஏ. தன்னை கடந்த மாதம் இரு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் போலீசில் புகார் கூறியுள்ளார். மேலும் தன்னை கவுகாத்திக்கு கடத்திச் செல்ல எம்.எல்.ஏ. முயன்றதாகவும் கூறியுள்ள அவர், தான் தற்கொலைக்கு முயன்றதால் அந்த முயற்சியை அவர் கைவிட்டதாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

குற்றச்சாட்டை மறுத்துள்ள எம்.எல்.ஏ. நிஜாம்உத்தின் சவுத்திரி, இது தனக்கு எதிரான சதி என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக போலீஸ் விசாரித்து வருகிறது.

Next Story