2019-ல் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியா ‘இந்து பாகிஸ்தான்’ ஆக மாறிவிடும்: சசி தரூர் பேச்சு


2019-ல் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியா ‘இந்து பாகிஸ்தான்’ ஆக மாறிவிடும்: சசி தரூர் பேச்சு
x
தினத்தந்தி 12 July 2018 1:28 AM GMT (Updated: 12 July 2018 1:28 AM GMT)

2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கட்சி மீண்டும் வெற்றி பெற்றால் இந்திய நாடு ‘இந்து பாகிஸ்தானாக மாறிவிடும்' என சசி தரூர் கூறியுள்ளார். #ShashiTharoor

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கலந்து கொண்டார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய சசி தரூர் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கட்சி மீண்டும் வெற்றி பெற்றால் இந்திய நாடு ‘இந்து பாகிஸ்தானாக மாறிவிடும்’ எனக் கூறியுள்ளார். சசி தரூரின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் அவர் பேசியதாவது,

”2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்றால் நமது நாட்டின் ஜனநாயம் சிதைந்து போய் விடும். புதிய அரசியலைப்பை உருவாக்க வேண்டியிருக்கும். இந்து ராஷ்டிரா கொள்கைகள் புதிதாக உருவாக்கப்பட்டு, சிறுபான்மையினருக்கான சமத்துவம் மறுக்கப்படும். இந்திய நாடு ‘இந்து பாகிஸ்தானக மாறிவிடும்’. மகாத்மா காந்தி, நேரு, சர்தார் படேல், ஆசாத் போன்ற இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்கள் எதற்காக போராடினார்களோ? அது இல்லாமல் போய் விடும்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் சசி தரூரின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், பாஜக செய்தி தொடர்பாளர் சமித் பத்ரா “பேராசையின் காரணமாக பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கிய காங்கிரஸ் கட்சி இந்தியாவை தரம் தாழ்த்தியது. சசி தரூரின் பேச்சு இந்து ராஷ்டிராவை அவமதிப்பதாக உள்ளது. மேலும், சசி தரூரின் இப்பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Next Story