நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி
நம்பிக்கை இல்லா தீர்மானத்தில், மத்திய அரசுக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார். #PMmodi
புதுடெல்லி,
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு மீது முதன் முதலாக நேற்று காலை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த, நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகளும், எதிராக 126 வாக்குகளும் கிடைத்தன.
இந்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது, மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்த கட்சிகளுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மக்களவை மீதும், 125 கோடி மக்கள் மீதும் தேசிய ஜனநாயக கூட்டணி, நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறியுள்ள அவர், புதிய இந்தியாவை உருவாக்கவும், இளைஞர்களின் கனவை நினைவாக்கும் முயற்சி தொடரும் என தெரிவித்துள்ளார்.
NDA has the confidence of the Lok Sabha and the 125 crore people of India.
— Narendra Modi (@narendramodi) July 20, 2018
I thank all the parties that have supported us in the vote today. Our efforts to transform India and fulfil the dreams of our youth continue. Jai Hind!
Related Tags :
Next Story