காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் இன்று சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
அனந்த்நாக்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று காலை பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் பாதுகாப்பு படையினரின் இந்த என்கவுண்டர் முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
அந்த பகுதியில் தீவிரவாதிகள் இருக்கிறார்களா? என்று தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
Related Tags :
Next Story