கர்ப்பிணி மனைவி முன்னால் கணவர் வெட்டிக் கொல்லப்பட்ட கொடூரம்
கர்ப்பிணி மனைவி முன்னால் கணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.
ஐதராபாத்,
தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவை சேர்ந்த ப்ரனய் பெருமல்லா, அம்ருதாவிற்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாகதான் திருமணம் நடைபெற்றுள்ளது. ப்ரனய் பெருமல்லா தன்னுடைய மனைவி அம்ருதாவுடன் அங்குள்ள ஜோதி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார். அம்ருதா மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கிறார், அவரை பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையில் இருந்து வெளியேறிய போது அடையாளம் தெரியாத மர்ம நபர், பெருமல்லாவை கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடக்கிறது என்று யோசிக்கும் முன்பே மர்மநபர், பெருமல்லாவை வெட்டிக் கொலை செய்துள்ளார். அருகிலிருந்தவர்களின் உதவியை கோரும் அம்ருதா, மருத்துவமனைக்குள் வேகமாக ஓடும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருமல்லா எஸ்.சி. பிரிவை சேர்ந்தவர் என்றும் அம்ருதா உயர் வகுப்பை சேர்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.
Related Tags :
Next Story