ராமர் கோவிலை மறந்துவிட்டு இஸ்லாமிய பெண்களின் வழக்கறிஞராகியுள்ளார் மோடி -பிரவீன் தொகாடியா விமர்சனம்


ராமர் கோவிலை மறந்துவிட்டு இஸ்லாமிய பெண்களின் வழக்கறிஞராகியுள்ளார் மோடி -பிரவீன் தொகாடியா விமர்சனம்
x
தினத்தந்தி 20 Sep 2018 10:40 AM GMT (Updated: 20 Sep 2018 10:40 AM GMT)

பிரதமர் மோடி, ராமர் கோவில் கட்டுவதை மறந்துவிட்டு இஸ்லாமிய பெண்களின் வழக்கறிஞராகியுள்ளார் என பிரவீன் தொகாடியா விமர்சனம் செய்துள்ளார்.

ருத்ராபூர்,

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா இப்போது அந்தரஷ்ட்ரியா இந்து பரிஷத் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவருடைய அமைப்பின் சார்பில் அக்டோபர் 21-ம் தேதி லக்னோவில் இருந்து அயோத்தியாவிற்கு பேரணி நடைபெறும் என கூறியுள்ளார்.
 
ஹால்டுவானி செய்தியாளர்களிடம் பேசிய தொகாடியா,  “பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும், கல்வி எளிமையாக அனைவருக்கும் கிடைக்க வேண்டும், கோடிக்கணக்கான இளைஞர்களுக்கும் வேலை கிடைக்கும், பெட்ரோல் விலை குறைந்தது, விவசாயிகள் தங்கள் கடன்களை திருப்பி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம் ஆனால் மோடி அரசு அதனையெல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டது” என கூறியுள்ளார். ராமர் கோவில் கட்டும் விவகாரத்தை மறந்து, மோடி முத்தலாக் விவகாரத்தில் இஸ்லாமிய பெண்களின் வழக்கறிஞராகியுள்ளார் என விமர்சனம் செய்துள்ளார். 

Next Story