இந்திய விமான படை ஹெலிகாப்டர் அருணாசல பிரதேசத்தில் அவசரமுடன் தரையிறங்கியது
இந்திய விமான படையை சேர்ந்த மி-17 ஹெலிகாப்டர் ஒன்று அருணாசல பிரதேசத்தில் அவசரமுடன் தரையிறங்கியது.
புதுடெல்லி,
இந்திய விமான படையை சேர்ந்த மி-17 ஹெலிகாப்டர் ஒன்று 16 பேருடன் டுடிங் நகரில் இருந்து இன்று புறப்பட்டு சென்றது. வழக்கம்போல் சென்ற இந்த ஹெலிகாப்டர் இன்று மதியம் டுடிங் நகருக்கு மேற்கே அவசரமுடன் தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 16 பேரும் பாதுகாப்புடன் உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. ஆனால் அது தரையிறக்கப்பட்டதற்கான காரணம் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire