பாலியல் உறவுக்கு சம்மதிக்குமாறு பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை


பாலியல் உறவுக்கு சம்மதிக்குமாறு பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 15 Oct 2018 10:15 PM GMT (Updated: 15 Oct 2018 8:37 PM GMT)

பாலியல் உறவுக்கு சம்மதிக்குமாறு பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் பர்பானி மாவட்டம் பர்பானியில் ஒரு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தவர் சச்சின் மிட்காரி (வயது 38). இவர், தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். அதைப் பார்த்து பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த வீட்டில், சச்சின் மிட்காரி தனது கைப்பட எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தன்னுடன் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் ஒரு பெண்ணின் பாலியல் துன்புறுத்தலால், தற்கொலை செய்துகொள்வதாக மிட்காரி எழுதி இருந்தார்.

தான் திருமணம் ஆனவன் என்று தெரிந்தும், தன்னை பாலியல் உறவுக்கு வருமாறு அந்த பெண் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், சம்மதிக்க மறுத்தால், பொய் புகார் கொடுப்பதாக ‘பிளாக்மெயில்’ செய்து வருவதாகவும் அவர் எழுதி இருந்தார்.

இதன் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியதாக அந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story