சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு


சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 8 Nov 2018 8:49 AM GMT (Updated: 8 Nov 2018 8:49 AM GMT)

சத்தீஷ்காரின் தண்டேவாடாவில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிகுண்டு வைத்து தகர்க்க செய்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

ராய்பூர்,

தண்டேவாடாவின் பாசிலி பகுதியில் மத்திய துணை ராணுவப்படையினரை ஏற்றி வந்த பஸ்சை குறிவைத்து மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கண்ணி வெடிகுண்டை வெடிக்க செய்தனர். இந்த தாக்குதலில் பொதுமக்களில் மூவரும், ஒரு போலீசாரும் உயிரிழந்தனர். இரண்டு போலீசார் காயம் அடைந்துள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சத்தீஷ்காரில் நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

Next Story