ஜம்மு காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது


ஜம்மு காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது
x

ஜம்மு காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததன் பேரில் விரைந்து சென்ற போலீசார் 2 பயங்கரவாதிகளை கைது செய்தனர். 

விசாரணையில் அவர்கள் ஹிஜ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story