மேகதாது அணை : கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் நேரில் ஆய்வு
காவிரியாற்றில் மேகதாது என்ற இடத்தில் அணையை கட்ட ஆய்வை நடத்தியது கர்நாடக அரசு.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு முதல்கட்ட அனுமதி வழங்கியதை அடுத்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை கர்நாடக அரசு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் காவிரியாற்றில் மேகதாது என்ற இடத்தில் அணையை கட்ட ஆய்வை தொடங்கியது கர்நாடக அரசு.
பொதுப்பணித்துறை, வனத்துறை, வல்லுநர் குழுவுடன் நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கிய நிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story