டெல்லியில் ராகுல் காந்தி இல்லம் முன் காங்கிரஸ் தொண்டர்கள் பூஜை


டெல்லியில் ராகுல் காந்தி இல்லம் முன் காங்கிரஸ் தொண்டர்கள் பூஜை
x
தினத்தந்தி 11 Dec 2018 3:01 AM GMT (Updated: 11 Dec 2018 3:01 AM GMT)

டெல்லியில் ராகுல் காந்தி இல்லம் முன் காங்கிரஸ் தொண்டர்கள் பூஜை செய்து வருகின்றனர்.

புதுடெல்லி,

சட்டசபை தேர்தல் நடைபெற்ற தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

இதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி இருந்து வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்ற நிலையில், நாடு முழுவதும் ஓட்டு எண்ணிக்கையின் முடிவுகளை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இல்லம் முன் காங்கிரஸ் தொண்டர்கள் வெற்றி பெற வேண்டி ஹோமம் வளர்த்து பூஜை செய்து வருகின்றனர்.  இதில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல், மகள் பிரியங்கா உள்ளிட்டோரின் புகைப்படங்களை வைத்து தொண்டர்கள் பூஜையில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story