காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் நகரில் பரத்காலன்-கண்ட் மொஹல்லா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படை அங்கு நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
இதில், பதுங்கி இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து பதிலடி தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் நேற்றிரவு முடிவுக்கு வந்தது.
இதன்பின்னர் இன்று காலை தேடுதல் வேட்டை மீண்டும் தொடர்ந்தது. பாதுகாப்பு படையினரின் இந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story