என்னுடைய வளர்ச்சியை கண்டு ஆளுங்கட்சியை தாண்டி எதிர்க்கட்சி பயப்படுகிறது - டிடிவி தினகரன்
என்னுடைய வளர்ச்சியை கண்டு ஆளுங்கட்சியை தாண்டி எதிர்க்கட்சி பயப்படுகிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
பெங்களூரு,
தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுடன் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தபின் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், அமமுகவில் யாரும் அதிருப்தியில் இருப்பதுபோல் தெரியவில்லை. என்னுடைய வளர்ச்சியை கண்டு ஆளுங்கட்சியை தாண்டி எதிர்க்கட்சி பயப்படுகிறது என்று கூறினார். சிலர் விலகிவிடுவதால் கட்சி போய்விடும் என்றால், உலகத்தில் எந்த கட்சியும் இருக்காது என குறிப்பிட்டார். ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் முதல் கோணல் முற்றிலும் கோணல் என விமர்சனம் செய்துள்ளார் டிடிவி தினகரன்.
Related Tags :
Next Story