விடுதலையான ஹமீது அன்சாரி சுஷ்மா சுவராஜூக்கு நன்றி தெரிவித்தார்
பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய பொறியாளர் ஹமீது அன்சாரி, டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தார்.
புதுடெல்லி,
மும்பையை சேர்ந்த ஹமீது அன்சாரி, கடந்த 2012 ஆம் ஆண்டு தனது இணையதள தோழியை பார்ப்பதற்காக பாகிஸ்தான் சென்ற போது சட்டவிரோதமாக நுழைந்ததாகவும், அடையாள அட்டையை போலியாக வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
6 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு நேற்று விடுவிக்கப்பட்ட ஹமீது அன்சாரி, வாகா எல்லையில் இந்திய மண்ணை முத்தமிட்டு பெற்றோருடன் இணைந்தார். இந்த நிலையில் இன்று அவர் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தார். தனது விடுதலைக்கு அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு அவர் நன்றி தெரிவித்து உள்ளார்.
#WATCH Indian National Hamid Ansari who came to India after being released from a Pakistan jail yesterday, meets External Affairs Minister Sushma Swaraj in Delhi. His mother tells EAM "Mera Bharat mahaan, meri madam mahaan, sab madam ne hi kiya hai." pic.twitter.com/FQEzz99Ohm
— ANI (@ANI) December 19, 2018
Related Tags :
Next Story