விமான நிலையங்களில் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு உத்தரவு


விமான நிலையங்களில் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு உத்தரவு
x
தினத்தந்தி 26 Dec 2018 1:18 PM GMT (Updated: 26 Dec 2018 1:18 PM GMT)

விமான நிலையங்களில் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களியிலும் இந்தி, ஆங்கிலத்தை அடுத்து உள்ளூர் மொழியிலும் பொது அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று அனைத்து விமான நிலையங்களுக்கு அரசு உத்தரவை அனுப்பியுள்ளது.

மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவின்படி இந்நகர்வு ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் மொழியிலும் பொது அறிவிப்பை வெளியிடுவது தொடர்பாக தனியார் விமான நிறுவனங்களுக்கும் தகவலை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. அனைத்து விமான நிலையங்களிலும் உள்ளூர் மொழியிலும் அறிவிப்பை வெளியிட தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார். பொது அறிவிப்பு வெளியாகாத விமான நிலையங்களுக்கும் இது பொருந்தும்.  2016-ல் இந்திய விமான நிலைய ஆணையம் அனைத்து விமான நிலையங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், இந்தி, ஆங்கிலத்தை அடுத்து உள்ளூர் மொழியிலும் அறிவிப்பை வெளியிட கேட்டுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 100-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளது. அங்கு உள்ளூர் மொழியிலும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்ததை அடுத்து மத்திய அமைச்சகம் இம்முடிவை எடுத்துள்ளது.

Next Story