டெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்ததில் 7 பேர் பலி


டெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்ததில் 7 பேர் பலி
x
தினத்தந்தி 4 Jan 2019 1:16 AM GMT (Updated: 4 Jan 2019 1:16 AM GMT)

டெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

புதுடெல்லி,

டெல்லியில் சுதர்ஷன் பூங்கா பகுதியில் 2 அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்றில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று நேற்றிரவு திடீரென வெடித்துள்ளது.  இதில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இந்த கட்டிடத்தில் மின் விசிறிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைகள் நடந்து வந்துள்ளன.  மக்கள் நெருக்கடி அதிகம் நிறைந்த பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றனர்.  அங்கிருந்து 15 பேர் மீட்கப்பட்டு ஆச்சார்யா பிக்சு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் 5 வயது குழந்தை உள்பட 7 பேர் பலியாகினர்.  4 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.  அவர்கள் சப்தர்ஜங்க் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  கட்டிடத்தின் இடிபாடுகளில் இன்னும் சிலர் சிக்கியிருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

Next Story