கடலூரில் இரு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 16 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
கடலூரில் இரு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 16 பேர் குற்றவாளிகள் என கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த பள்ளி மாணவிகள் இருவரை காணவில்லை என பெற்றோர்கள் கடந்த 2014 ஜூன் மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார், இரு சிறுமிகளையும் ஆகஸ்ட் 5-ம் தேதி கண்டுபிடித்து மீட்டனர். பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில், சிறுமிகள் இருவரையும், திட்டக்குடி பகுதியில் வசிக்கும் பாதிரியார் அருள்தாஸ், பாலியல் வன்முறைக்கு உள்படுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரியவந்தது.
இதேபோல் திட்டக்குடியைச் சேர்ந்த தனலட்சுமி, மேகலா, நெல்லிக்குப்பம் ராதா, கோலியனூர் கூட்ரோடு பாத்திமா, சேலம் அன்பு ஆகியோர் இந்த மாணவிகளை விடுதியில் தங்க வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸ் அதிரடி கைது வேட்டையை நடத்தியது, 30-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டது.
மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வழக்கில் 16 பேர் குற்றவாளிகள் என அறிவித்துள்ளது. வறுமையில் உள்ள சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவது வெட்கப்பட வேண்டிய செயல் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளில் 8 பேர் பெண்கள், 8 பேர் ஆண்கள் ஆவர். அவர்களுக்கான தண்டனை விபரம் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story