நிர்மலா சீதாராமன் தொடர்பான ராகுலின் பேச்சு பெண்களை அவமதிப்பு செய்வது - பிரதமர் மோடி சொல்கிறார்


நிர்மலா சீதாராமன் தொடர்பான ராகுலின் பேச்சு பெண்களை அவமதிப்பு செய்வது - பிரதமர் மோடி சொல்கிறார்
x
தினத்தந்தி 9 Jan 2019 2:58 PM GMT (Updated: 9 Jan 2019 2:58 PM GMT)

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்பான ராகுல் காந்தியின் பேச்சு பெண்களை அவமதிப்பு செய்வதாகும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ரபேல் விவாதம் நடைபெற்ற போது பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை  என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். பாராளுமன்றத்தில் விவாதத்திலிருந்து தப்பித்துக்கொள்ள பெண் ஒருவரை நியமித்துள்ளார் என்று கூறியுள்ளார். நிர்மலா சீதாராமன் காங்கிரசின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிலையில் இக்கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நிர்மலா சீதாராமன் தொடர்பான ராகுலில் பேச்சு பெண்களை அவமதிப்பு செய்வது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். 

பிரதமர் மோடி பேசுகையில் “முதல்முறையாக இந்தியாவின் மகள் பாதுகாப்புத்துறை அமைச்சராகியுள்ளார். இது மிகவும் பெருமையான விஷயம். பாராளுமன்றத்தில் ரபேல் தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டையும் அமைதியாக்கினார், பொய்யை வெளிப்படுத்தினார். அதிர்ச்சியடைந்தவர்கள் பெண் பாதுகாப்பு அமைச்சரை அவமானப்படுத்தி உள்ளனர். அவர்கள் பாதுகாப்புத்துறை அமைச்சரை மட்டுமல்ல, இந்தியாவின் பெண் சக்தியையும் அவமதித்துள்ளனர்” என கூறினார். 

Next Story