ஏசி அறையில் இருந்து கொண்டு ராமர் கோவில் அரசியல் விளையாடப்படுகிறது -நடிகர் பிரகாஷ்ராஜ்


ஏசி அறையில் இருந்து கொண்டு ராமர் கோவில் அரசியல் விளையாடப்படுகிறது -நடிகர் பிரகாஷ்ராஜ்
x
தினத்தந்தி 18 Jan 2019 11:34 AM GMT (Updated: 18 Jan 2019 11:34 AM GMT)

டெல்லி மற்றும் லக்னோவில் ஏசி அறையில் இருந்து கொண்டு ராமர் கோவில் அரசியல் விளையாடப்படுகிறது என நடிகர் பிரகாஷ்ராஜ் குற்றம்சாட்டினார்.

பெங்களூர்,

தென்னிந்தியத் திரைப்படங்களிலும், பாலிவுட்டிலும் பிரபலமாக உள்ளவர் நடிகர் பிரகாஷ்ராஜ். அவர் தனது அரசியல் அறிமுகத்தை அறிவித்த சில நாட்களுக்கு பிறகு பாரதீய ஜனதாவை கடுமையான தாக்கி பேசினார். 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மத்திய பெங்களூரில் போட்டியிட பிரகாஷ்ராஜ் முடிவு செய்துள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

ராமர்கோவில் அரசியல் டெல்லியிலும், லக்னோவிலும் ஏசி அறையில் இருந்து கொண்டு விளையாடப்படுகிறது. பத்திரிகையாளர்களுக்கு நான் சவால் விடுகிறேன். உத்தரப்பிரதேசம் அயோத்திக்கு வருகை புரிந்து புனித நகரத்தில் உள்ள மக்கள் தெருக்களில் எப்படி வாழ்கிறார்கள் என பாருங்கள். இவர்கள் ராம ராஜ்ஜியத்தை கொண்டுவரப் போகிறார்கள் என கூறினார்.

Next Story