உத்தரப்பிரதேச கும்பமேளாவில் அமைச்சரவை கூட்டம்; அமைச்சர்கள் புனித நீராடினார்கள்


உத்தரப்பிரதேச கும்பமேளாவில் அமைச்சரவை கூட்டம்; அமைச்சர்கள் புனித நீராடினார்கள்
x
தினத்தந்தி 29 Jan 2019 10:56 AM GMT (Updated: 29 Jan 2019 10:56 AM GMT)

உத்தரப்பிரதேசத்தில் முதன்முறையாக பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளாவில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.பின்னர் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் புனித நீராடினர்

பிரயாக்ராஜ்

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் 49-நாள்  கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதன்முறையாகக் கும்பமேளாவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைநகரான லக்னோவுக்கு வெளியே அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதும் இதுதான் முதல் முறையாகும்.

பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கும்பமேளாவைச் சிறப்பாக நடத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் யமுனையாறு கங்கையாற்றுடன் கலக்குமிடத்தில் முதல்-அமைச்சர்  யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் புனித நீராடினர்.


Next Story