இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிராஜ் போர் விமானம் விபத்தில் சிக்கியது: ஒரு விமானி பலி
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிராஜ் போர் விமானம் விபத்தில் சிக்கியதில் ஒரு விமானி பலியானார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஏமலூர் பகுதியில் உள்ள எச்ஏஎல் விமான நிலையத்தில் இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
அப்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து எதிர்பாராதவிதமாக சுற்றுச்சுவர் மீது விமானம் மோதி தீப்பிடித்தது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானிகள் இருவரும் வெளியே குதித்தனர்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக விமானத்தின் சேத பாகங்கள் மீது விழுந்த விமானி ஒருவர் பலியானார். படுகாயம் அடைந்த மற்றொரு விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Related Tags :
Next Story