காரில் இருந்து வெளியே இழுத்து இளம்பெண் 10 நபர்களால் பாலியல் பலாத்காரம்
காரில் வந்த இளம் பெண்ணை வெளியே இழுத்து 10 நபர்கள் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளது.
லுதியானா,
பஞ்சாப் மாநிலம் லுதியானா மாவட்டத்தில் காரில் வந்த பெண்ணை காரில் இருந்து வெளியே இழுத்து 10 நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் தனது ஆண் நண்பருடன் ஒரு காரில் லுதியானாவில் இருந்து லெஸ்வால் கிராமத்திற்கு சென்று உள்ளார். அப்போது அவரது காரை 3 மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் விரட்டி வந்தனர்.
அந்த நபர்கள் கல்லை வீசி அந்த காரை நிறுத்தி உள்ளனர். பின்னர் காரில் இருந்து இளம் பெண்ணை வெளியே இழுத்த கும்பல் அந்த பெண்ணை ஆள் இல்லாத இடத்துக்கு இழுத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். உடன் வந்த நண்பரை சிறை வைத்து உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். மருத்துவ பரிசோதனையில் பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
10-க்கும் மேற்பட்டவர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story