காஷ்மீரில் தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகளின் பதுங்கு குழி கண்டறியப்பட்டது


காஷ்மீரில் தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகளின் பதுங்கு குழி கண்டறியப்பட்டது
x
தினத்தந்தி 6 March 2019 10:39 AM GMT (Updated: 6 March 2019 10:39 AM GMT)

காஷ்மீரின் சோபியான் நகரில் நடந்த தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகளின் பதுங்கு குழி கண்டறியப்பட்டு உள்ளது.

காஷ்மீர்,

காஷ்மீரின் சோபியான் நகரில் கங்னூ என்ற கிராமத்தில் அந்நகர போலீசார் மற்றும் 44 ராஷ்டீரிய ரைபிள் படை பிரிவினர் இணைந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில், தீவிரவாதிகளின் பதுங்கு குழி ஒன்று அப்பகுதியில் கண்டறியப்பட்டு உள்ளது.  தொடர்ந்து பிற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.  இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காஷ்மீரில் கடந்த 14-ந் தேதி ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி இந்திய துணை ராணுவ படையினர் மீது நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாதிகள் பதுங்கி இருந்து பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  இதனை எதிர்கொள்ள பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.  இந்நிலையில், தீவிரவாதிகளின் பதுங்கு குழி ஒன்று சோபியான் நகரில் கண்டறியப்பட்டு அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

Next Story