ஆட்டோவில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனுக்கு பொதுமக்கள் தர்ம அடி
ஆட்டோவில் வைத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை, பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
லக்னோ
உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில், கோம்தி நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவில் இருந்து பெண் ஒருவர் குதித்துள்ளார். இதைக் கண்ட வாகன ஓட்டிகள் அந்தப் பெண்ணை மீட்டு விசாரித்த போது, ஆட்டோ ஓட்டுநர் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறியுள்ளார். இதை அடுத்து ஆட்டோவை விரட்டிய அவர்கள், குறிப்பிட்ட தொலைவில் மடக்கினர். ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
அவரது ஆட்டோவும் அடித்து நொறுக்கப்பட்டது. பின்னர் அவன் போலீசில் ஒப்படைக்கப்பட்டான். ஆட்டோவில் இருந்து கீழே குதித்ததில் காயம்பட்ட அப்பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story