குதிரையில் சவாரி செய்து தேர்வு எழுதச் சென்ற மாணவி


குதிரையில் சவாரி செய்து தேர்வு எழுதச் சென்ற மாணவி
x
தினத்தந்தி 9 April 2019 7:25 AM GMT (Updated: 9 April 2019 7:25 AM GMT)

கேரளாவைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் தான் வளர்க்கும் குதிரையில் சவாரி செய்து தேர்வு எழுதச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கேரளாவின் திருச்சூர் மாவட்டம் மலாவைச் சேர்ந்தவர் கிருஷ்ணா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் ஒருமுறையாவது தேர்வுக்கு தான் வளர்க்கும் குதிரையில் சவாரி செய்ய வேண்டுமென விரும்பியுள்ளார் .அதன்படி தன்னுடைய கடைசி தேர்வை எழுத குதிரையில் புறப்பட்ட கிருஷ்ணாவை சாலையில் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட அது தற்போது வைரலாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து நியூஸ் மினிட்டுக்கு பேட்டி அளித்துள்ள கிருஷ்ணா, நான் வளர்க்கும் குதிரையில் சவாரி செய்து தேர்வு எழுத வேண்டுமென நான் திட்டமிட்டிருந்தேன். அதற்காகவே என்னுடைய கடைசி தேர்வை தேர்ந்தெடுத்தேன். இது சரியான திட்டமில்லை என பலரும் கூறினார்கள். ஆனால் நான் அவர்களின் அறிவுரையை ஏற்கவில்லை. இது எனக்கு புதிதான விஷயமும் இல்லை. கடந்த வருடமும் ஒரு தேர்வுக்கு குதிரையில் தான் சவாரி செய்து பள்ளிக்கு சென்றேன். இன்னும் சில பள்ளி விழாக்களுக்கும் குதிரையில் சென்றிருக்கிறேன் என்று தெரிவித்தார்.

Next Story